Kural 996 details
பொருட்பால் • குடியியல் • பண்புடைமை
Wealth • குடியியல் • பண்புடைமை
Verse
மண்புக்கு மாய்வது மன்.
பொருள் (Tamil)
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்
Explanation (English)
The world abides; for 'worthy' men its weight sustain Were it not so, 'twould fall to dust again
Athigaram
பண்பு உடைமை
Section / Chapter
Section: 100.6
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும்.இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
Parimezhalagar_Urai
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
Solomon_Pappaiya Urai
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.