Kural 988 details

பொருட்பால்குடியியல்சான்றாண்மை

Wealthகுடியியல்சான்றாண்மை

Back to search

Verse

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
Inmai Oruvarku Ilivandru Saalpennum Thinmai Un Taakap Perin

பொருள் (Tamil)

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

Explanation (English)

To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good

Athigaram

சான்றாண்மை

Section / Chapter

Section: 99.8

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

Parimezhalagar_Urai

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)

M_Varadharajanar Urai

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

Solomon_Pappaiya Urai

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.