Kural 91 details

அறத்துப்பால்இல்லறவியல்இனியவைகூறல்

Virtueஇல்லறவியல்இனியவைகூறல்

Back to search

Verse

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

பொருள் (Tamil)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்

Explanation (English)

Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern

Athigaram

இனியவை கூறல்

Section / Chapter

Section: 10.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவேஇன்சொல் எனப்படும்.

Parimezhalagar_Urai

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

Solomon_Pappaiya Urai

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.