Kural 898 details
பொருட்பால் • நட்பியல் • பெரியாரைப் பிழையாமை
Wealth • நட்பியல் • பெரியாரைப் பிழையாமை
Verse
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
பொருள் (Tamil)
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்
Explanation (English)
If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed
Athigaram
பெரியாரைப் பிழையாமை
Section / Chapter
Section: 90.8
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள்,நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
Parimezhalagar_Urai
குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)
M_Varadharajanar Urai
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.
Solomon_Pappaiya Urai
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.