Kural 866 details

பொருட்பால்நட்பியல்பகைமாட்சி

Wealthநட்பியல்பகைமாட்சி

Back to search

Verse

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan Penaamai Penap Patum

பொருள் (Tamil)

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

Explanation (English)

Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well

Athigaram

பகை மாட்சி

Section / Chapter

Section: 87.6

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

Parimezhalagar_Urai

காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)

M_Varadharajanar Urai

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

Solomon_Pappaiya Urai

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.