Kural 84 details

அறத்துப்பால்இல்லறவியல்விருந்தோம்பல்

Virtueஇல்லறவியல்விருந்தோம்பல்

Back to search

Verse

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu Nalvirundhu Ompuvaan Il

பொருள் (Tamil)

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்

Explanation (English)

With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest

Athigaram

விருந்து ஓம்பல்

Section / Chapter

Section: 9.4

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

Parimezhalagar_Urai

செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

M_Varadharajanar Urai

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

Solomon_Pappaiya Urai

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.