Kural 83 details
அறத்துப்பால் • இல்லறவியல் • விருந்தோம்பல்
Virtue • இல்லறவியல் • விருந்தோம்பல்
Verse
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள் (Tamil)
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை
Explanation (English)
Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share
Athigaram
விருந்து ஓம்பல்
Section / Chapter
Section: 9.3
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
Parimezhalagar_Urai
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
M_Varadharajanar Urai
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
Solomon_Pappaiya Urai
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.