Kural 764 details

பொருட்பால்படையியல்படைமாட்சி

Wealthபடையியல்படைமாட்சி

Back to search

Verse

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha Vanka Nadhuve Patai

பொருள் (Tamil)

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

Explanation (English)

That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed

Athigaram

படை மாட்சி

Section / Chapter

Section: 77.4

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

Parimezhalagar_Urai

அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)

M_Varadharajanar Urai

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

Solomon_Pappaiya Urai

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.