Kural 697 details

பொருட்பால்அமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல்

Wealthஅமைச்சியல்மன்னரைச் சேர்ந்தொழுதல்

Back to search

Verse

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
Vetpana Solli Vinaiyila Egngnaandrum Ketpinum Sollaa Vital

பொருள் (Tamil)

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்

Explanation (English)

Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard

Athigaram

மெய் உணர்தல்

Section / Chapter

Section: 70.7

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

Parimezhalagar_Urai

வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

Solomon_Pappaiya Urai

ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.