Kural 67 details

அறத்துப்பால்இல்லறவியல்புதல்வரைப் பெறுதல்

Virtueஇல்லறவியல்புதல்வரைப் பெறுதல்

Back to search

Verse

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu Mundhi Iruppach Cheyal

பொருள் (Tamil)

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

Explanation (English)

Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat

Athigaram

புதல்வரைப் பெறுதல்

Section / Chapter

Section: 7.7

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை<br>அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

Parimezhalagar_Urai

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

Solomon_Pappaiya Urai

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.