Kural 625 details
பொருட்பால் • அரசியல் • இடுக்கணழியாமை
Wealth • அரசியல் • இடுக்கணழியாமை
Verse
இடுக்கண் இடுக்கட் படும்.
பொருள் (Tamil)
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்
Explanation (English)
When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart
Athigaram
இடுக்கண் அழியாமை
Section / Chapter
Section: 63.5
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள்,துன்பப்பட்டு அழிந்து விடும்.
Parimezhalagar_Urai
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
Solomon_Pappaiya Urai
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.