Kural 616 details
பொருட்பால் • அரசியல் • ஆள்வினையுடைமை
Wealth • அரசியல் • ஆள்வினையுடைமை
Verse
இன்மை புகுத்தி விடும்.
பொருள் (Tamil)
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்
Explanation (English)
Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness
Athigaram
ஆள்வினை உடைமை
Section / Chapter
Section: 62.6
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
Parimezhalagar_Urai
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)
M_Varadharajanar Urai
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
Solomon_Pappaiya Urai
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.