Kural 616 details

பொருட்பால்அரசியல்ஆள்வினையுடைமை

Wealthஅரசியல்ஆள்வினையுடைமை

Back to search

Verse

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai Inmai Pukuththi Vitum

பொருள் (Tamil)

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்

Explanation (English)

Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness

Athigaram

ஆள்வினை உடைமை

Section / Chapter

Section: 62.6

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

Parimezhalagar_Urai

முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)

M_Varadharajanar Urai

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

Solomon_Pappaiya Urai

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.