Kural 604: மடியின்மை

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.

பொருட்பால்அரசியல்மடியின்மை

Wealthஅரசியல்மடியின்மை

Back to search

Verse

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
Kutimatindhu Kutram Perukum Matimatindhu Maanta Ugnatri Lavarkku

பொருள் (Tamil)

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

Explanation (English)

His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive

Athigaram

மடிஇன்மை

Section / Chapter

Section: 61.4

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்;குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

Parimezhalagar_Urai

மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

Solomon_Pappaiya Urai

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.