Kural 563 details
பொருட்பால் • அரசியல் • வெருவந்தசெய்யாமை
Wealth • அரசியல் • வெருவந்தசெய்யாமை
Verse
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
பொருள் (Tamil)
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்
Explanation (English)
Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure
Athigaram
வெருவந்த செய்யாமை
Section / Chapter
Section: 57.3
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
Parimezhalagar_Urai
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
M_Varadharajanar Urai
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
Solomon_Pappaiya Urai
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.