Kural 546 details

பொருட்பால்அரசியல்செங்கோன்மை

Wealthஅரசியல்செங்கோன்மை

Back to search

Verse

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa Thenin

பொருள் (Tamil)

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல் குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்

Explanation (English)

Not lance gives kings the victory, But sceptre swayed with equity

Athigaram

செங்கோன்மை

Section / Chapter

Section: 55.6

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

Parimezhalagar_Urai

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)

M_Varadharajanar Urai

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

Solomon_Pappaiya Urai

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.