Kural 545 details

பொருட்பால்அரசியல்செங்கோன்மை

Wealthஅரசியல்செங்கோன்மை

Back to search

Verse

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
Iyalpulik Kolochchum Mannavan Naatta Peyalum Vilaiyulum Thokku

பொருள் (Tamil)

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்

Explanation (English)

Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields

Athigaram

செங்கோன்மை

Section / Chapter

Section: 55.5

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

Parimezhalagar_Urai

பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)

M_Varadharajanar Urai

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

Solomon_Pappaiya Urai

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.