Kural 518 details

பொருட்பால்அரசியல்தெரிந்துவினையாடல்

Wealthஅரசியல்தெரிந்துவினையாடல்

Back to search

Verse

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
Vinaik Kurimai Naatiya Pindrai Avanai Adharkuriya Naakach Cheyal

பொருள் (Tamil)

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்

Explanation (English)

As each man's special aptitude is known, Bid each man make that special work his own

Athigaram

தெரிந்து வினையாடல்

Section / Chapter

Section: 52.8

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.

Parimezhalagar_Urai

வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)

M_Varadharajanar Urai

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

Solomon_Pappaiya Urai

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.