Kural 507 details

பொருட்பால்அரசியல்தெரிந்துதெளிதல்

Wealthஅரசியல்தெரிந்துதெளிதல்

Back to search

Verse

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal Pedhaimai Ellaan Tharum

பொருள் (Tamil)

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல் அதனால் பயனற்ற செயல்களே விளையும்

Explanation (English)

By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind control

Athigaram

தெரிந்து தெளிதல்

Section / Chapter

Section: 51.7

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

Parimezhalagar_Urai

காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும் (தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.)

M_Varadharajanar Urai

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

Solomon_Pappaiya Urai

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.