Kural 483 details

பொருட்பால்அரசியல்காலமறிதல்

Wealthஅரசியல்காலமறிதல்

Back to search

Verse

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
Aruvinai Yenpa Ulavo Karuviyaan Kaalam Arindhu Seyin

பொருள் (Tamil)

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

Explanation (English)

Can any work be hard in very fact, If men use fitting means in timely act

Athigaram

காலம் அறிதல்

Section / Chapter

Section: 49.3

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

Parimezhalagar_Urai

அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

M_Varadharajanar Urai

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Solomon_Pappaiya Urai

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?