Kural 448 details
பொருட்பால் • அரசியல் • பெரியாரைத் துணைக்கோடல்
Wealth • அரசியல் • பெரியாரைத் துணைக்கோடல்
Verse
கெடுப்பா ரிலானுங் கெடும்.
பொருள் (Tamil)
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்
Explanation (English)
The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall
Athigaram
பெரியாரைத் துணைக்கோடல்
Section / Chapter
Section: 45.8
Chapter: பொருட்பால்
Kalaingar_Urai
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
Parimezhalagar_Urai
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)
M_Varadharajanar Urai
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
Solomon_Pappaiya Urai
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.