Kural 443 details

பொருட்பால்அரசியல்பெரியாரைத் துணைக்கோடல்

Wealthஅரசியல்பெரியாரைத் துணைக்கோடல்

Back to search

Verse

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip Penith Thamaraak Kolal

பொருள் (Tamil)

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

Explanation (English)

To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known

Athigaram

பெரியாரைத் துணைக்கோடல்

Section / Chapter

Section: 45.3

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

Parimezhalagar_Urai

பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)

M_Varadharajanar Urai

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

Solomon_Pappaiya Urai

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.