Kural 426 details

பொருட்பால்அரசியல்அறிவுடைமை

Wealthஅரசியல்அறிவுடைமை

Back to search

Verse

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva Tharivu

பொருள் (Tamil)

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

Explanation (English)

As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well

Athigaram

அறிவு உடைமை

Section / Chapter

Section: 43.6

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

Parimezhalagar_Urai

உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

Solomon_Pappaiya Urai

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.