Kural 421 details

பொருட்பால்அரசியல்அறிவுடைமை

Wealthஅரசியல்அறிவுடைமை

Back to search

Verse

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum Ullazhikka Laakaa Aran

பொருள் (Tamil)

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்

Explanation (English)

True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy

Athigaram

அறிவு உடைமை

Section / Chapter

Section: 43.1

Chapter: பொருட்பால்

Kalaingar_Urai

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

Parimezhalagar_Urai

அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

Solomon_Pappaiya Urai

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.