Kural 365 details
அறத்துப்பால் • துறவறவியல் • அவாவறுத்தல்
Virtue • துறவறவியல் • அவாவறுத்தல்
Verse
அற்றாக அற்றது இலர்.
பொருள் (Tamil)
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்
Explanation (English)
Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty
Athigaram
அவா அறுத்தல்
Section / Chapter
Section: 37.5
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்,தூய துறவியாக மாட்டார்.
Parimezhalagar_Urai
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
Solomon_Pappaiya Urai
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.