Kural 347 details

அறத்துப்பால்துறவறவியல்துறவு

Virtueதுறவறவியல்துறவு

Back to search

Verse

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku

பொருள் (Tamil)

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

Explanation (English)

Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp

Athigaram

துறவு

Section / Chapter

Section: 35.7

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

Parimezhalagar_Urai

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

Solomon_Pappaiya Urai

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.