Kural 340 details
அறத்துப்பால் • துறவறவியல் • நிலையாமை
Virtue • துறவறவியல் • நிலையாமை
Verse
துச்சில் இருந்த உயிர்க்கு.
பொருள் (Tamil)
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது
Explanation (English)
The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows
Athigaram
நிலையாமை
Section / Chapter
Section: 34.10
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம்<br>கிடையாது.
Parimezhalagar_Urai
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால்,
M_Varadharajanar Urai
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
Solomon_Pappaiya Urai
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!