Kural 340 details

அறத்துப்பால்துறவறவியல்நிலையாமை

Virtueதுறவறவியல்நிலையாமை

Back to search

Verse

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
Pukkil Amaindhindru Kollo Utampinul Thuchchil Irundha Uyirkku

பொருள் (Tamil)

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது

Explanation (English)

The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows

Athigaram

நிலையாமை

Section / Chapter

Section: 34.10

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம்<br>கிடையாது.

Parimezhalagar_Urai

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால்,

M_Varadharajanar Urai

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

Solomon_Pappaiya Urai

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!