Kural 339 details
அறத்துப்பால் • துறவறவியல் • நிலையாமை
Virtue • துறவறவியல் • நிலையாமை
Verse
விழிப்பது போலும் பிறப்பு.
பொருள் (Tamil)
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
Explanation (English)
Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep
Athigaram
நிலையாமை
Section / Chapter
Section: 34.9
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
Parimezhalagar_Urai
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
Solomon_Pappaiya Urai
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.