Kural 339 details

அறத்துப்பால்துறவறவியல்நிலையாமை

Virtueதுறவறவியல்நிலையாமை

Back to search

Verse

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu

பொருள் (Tamil)

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

Explanation (English)

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep

Athigaram

நிலையாமை

Section / Chapter

Section: 34.9

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

Parimezhalagar_Urai

சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

Solomon_Pappaiya Urai

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.