Kural 331 details

அறத்துப்பால்துறவறவியல்நிலையாமை

Virtueதுறவறவியல்நிலையாமை

Back to search

Verse

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai Katai

பொருள் (Tamil)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்

Explanation (English)

Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure

Athigaram

நிலையாமை

Section / Chapter

Section: 34.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

Parimezhalagar_Urai

நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)

M_Varadharajanar Urai

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

Solomon_Pappaiya Urai

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.