Kural 324 details

அறத்துப்பால்துறவறவியல்கொல்லாமை

Virtueதுறவறவியல்கொல்லாமை

Back to search

Verse

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Kollaamai Soozhum Neri

பொருள் (Tamil)

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்

Explanation (English)

You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay

Athigaram

கொல்லாமை

Section / Chapter

Section: 33.4

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

Parimezhalagar_Urai

நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

Solomon_Pappaiya Urai

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.