Kural 295 details

அறத்துப்பால்துறவறவியல்வாய்மை

Virtueதுறவறவியல்வாய்மை

Back to search

Verse

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu Thaananjey Vaarin Thalai

பொருள் (Tamil)

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்

Explanation (English)

Greater is he who speaks the truth with full consenting mind Than men whose lives have penitence and charity combined

Athigaram

வாய்மை

Section / Chapter

Section: 30.5

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும்,தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

Parimezhalagar_Urai

மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

M_Varadharajanar Urai

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

Solomon_Pappaiya Urai

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.