Kural 284 details

அறத்துப்பால்துறவறவியல்கள்ளாமை

Virtueதுறவறவியல்கள்ளாமை

Back to search

Verse

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam Tharum

பொருள் (Tamil)

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

Explanation (English)

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain

Athigaram

கள்ளாமை

Section / Chapter

Section: 29.4

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

Parimezhalagar_Urai

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

Solomon_Pappaiya Urai

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.