Kural 283 details

அறத்துப்பால்துறவறவியல்கள்ளாமை

Virtueதுறவறவியல்கள்ளாமை

Back to search

Verse

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu Aavadhu Polak Ketum

பொருள் (Tamil)

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்

Explanation (English)

The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go

Athigaram

கள்ளாமை

Section / Chapter

Section: 29.3

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது,முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.

Parimezhalagar_Urai

களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

M_Varadharajanar Urai

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

Solomon_Pappaiya Urai

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.