Kural 265 details
அறத்துப்பால் • துறவறவியல் • தவம்
Virtue • துறவறவியல் • தவம்
Verse
ஈண்டு முயலப் படும்.
பொருள் (Tamil)
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்
Explanation (English)
That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' done
Athigaram
தவம்
Section / Chapter
Section: 27.5
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.
Parimezhalagar_Urai
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
Solomon_Pappaiya Urai
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.