Kural 258 details
அறத்துப்பால் • துறவறவியல் • புலான்மறுத்தல்
Virtue • துறவறவியல் • புலான்மறுத்தல்
Verse
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
பொருள் (Tamil)
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்
Explanation (English)
Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave
Athigaram
புலால் மறுத்தல்
Section / Chapter
Section: 26.8
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.
Parimezhalagar_Urai
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)
M_Varadharajanar Urai
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
Solomon_Pappaiya Urai
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.