Kural 258 details

அறத்துப்பால்துறவறவியல்புலான்மறுத்தல்

Virtueதுறவறவியல்புலான்மறுத்தல்

Back to search

Verse

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar Uyirin Thalaippirindha Oon

பொருள் (Tamil)

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்

Explanation (English)

Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave

Athigaram

புலால் மறுத்தல்

Section / Chapter

Section: 26.8

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

Parimezhalagar_Urai

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)

M_Varadharajanar Urai

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

Solomon_Pappaiya Urai

பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.