Kural 257 details
அறத்துப்பால் • துறவறவியல் • புலான்மறுத்தல்
Virtue • துறவறவியல் • புலான்மறுத்தல்
Verse
புண்ணது உணர்வார்ப் பெறின்.
பொருள் (Tamil)
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்
Explanation (English)
With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease
Athigaram
புலால் மறுத்தல்
Section / Chapter
Section: 26.7
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.
Parimezhalagar_Urai
புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)
M_Varadharajanar Urai
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
Solomon_Pappaiya Urai
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.