Kural 246 details

அறத்துப்பால்துறவறவியல்அருளுடைமை

Virtueதுறவறவியல்அருளுடைமை

Back to search

Verse

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi Allavai Seydhozhuku Vaar

பொருள் (Tamil)

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்

Explanation (English)

Gain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do

Athigaram

அருள் உடைமை

Section / Chapter

Section: 25.6

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

Parimezhalagar_Urai

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

M_Varadharajanar Urai

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

Solomon_Pappaiya Urai

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.