Kural 218 details

அறத்துப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல்

Virtueஇல்லறவியல்ஒப்புரவறிதல்

Back to search

Verse

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
Itanil Paruvaththum Oppuravirku Olkaar Katanari Kaatchi Yavar

பொருள் (Tamil)

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்

Explanation (English)

E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true

Athigaram

ஒப்புரவு அறிதல்

Section / Chapter

Section: 22.8

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

Parimezhalagar_Urai

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)

M_Varadharajanar Urai

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

Solomon_Pappaiya Urai

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.