Kural 212 details
அறத்துப்பால் • இல்லறவியல் • ஒப்புரவறிதல்
Virtue • இல்லறவியல் • ஒப்புரவறிதல்
Verse
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள் (Tamil)
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
Explanation (English)
The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours
Athigaram
ஒப்புரவு அறிதல்
Section / Chapter
Section: 22.2
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
Parimezhalagar_Urai
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)
M_Varadharajanar Urai
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
Solomon_Pappaiya Urai
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.