Kural 212 details

அறத்துப்பால்இல்லறவியல்ஒப்புரவறிதல்

Virtueஇல்லறவியல்ஒப்புரவறிதல்

Back to search

Verse

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku Velaanmai Seydhar Poruttu

பொருள் (Tamil)

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்

Explanation (English)

The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours

Athigaram

ஒப்புரவு அறிதல்

Section / Chapter

Section: 22.2

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

Parimezhalagar_Urai

தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

M_Varadharajanar Urai

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

Solomon_Pappaiya Urai

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.