Kural 202: தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
அறத்துப்பால் • இல்லறவியல் • தீவினையச்சம்
Virtue • இல்லறவியல் • தீவினையச்சம்
Verse
தீயினும் அஞ்சப் படும்.
பொருள் (Tamil)
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
Explanation (English)
Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe
Athigaram
தீவினை அச்சம்
Section / Chapter
Section: 21.2
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
Parimezhalagar_Urai
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
M_Varadharajanar Urai
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
Solomon_Pappaiya Urai
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.