Kural 199 details
அறத்துப்பால் • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Virtue • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Verse
மாசறு காட்சி யவர்.
பொருள் (Tamil)
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
Explanation (English)
The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity
Athigaram
பயன்இல சொல்லாமை
Section / Chapter
Section: 20.9
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
யக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
Parimezhalagar_Urai
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது)"
M_Varadharajanar Urai
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
Solomon_Pappaiya Urai
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.