Kural 198 details
அறத்துப்பால் • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Virtue • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Verse
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள் (Tamil)
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
Explanation (English)
The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance
Athigaram
பயன்இல சொல்லாமை
Section / Chapter
Section: 20.8
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
Parimezhalagar_Urai
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
M_Varadharajanar Urai
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
Solomon_Pappaiya Urai
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.