Kural 196 details

அறத்துப்பால்இல்லறவியல்பயனில சொல்லாமை

Virtueஇல்லறவியல்பயனில சொல்லாமை

Back to search

Verse

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
Payanil Sol Paaraattu Vaanai Makanenal Makkat Padhati Yenal

பொருள் (Tamil)

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

Explanation (English)

Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity

Athigaram

பயன்இல சொல்லாமை

Section / Chapter

Section: 20.7

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

Parimezhalagar_Urai

பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

M_Varadharajanar Urai

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

Solomon_Pappaiya Urai

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.