Kural 193 details
அறத்துப்பால் • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Virtue • இல்லறவியல் • பயனில சொல்லாமை
Verse
பாரித் துரைக்கும் உரை.
பொருள் (Tamil)
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
Explanation (English)
Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains
Athigaram
பயன்இல சொல்லாமை
Section / Chapter
Section: 20.3
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
Parimezhalagar_Urai
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
M_Varadharajanar Urai
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
Solomon_Pappaiya Urai
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.