Kural 192 details

அறத்துப்பால்இல்லறவியல்பயனில சொல்லாமை

Virtueஇல்லறவியல்பயனில சொல்லாமை

Back to search

Verse

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
Payanila Pallaarmun Sollal Nayanila Nattaarkan Seydhalir Reedhu

பொருள் (Tamil)

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

Explanation (English)

Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more

Athigaram

பயன்இல சொல்லாமை

Section / Chapter

Section: 20.2

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

Parimezhalagar_Urai

பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)

M_Varadharajanar Urai

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

Solomon_Pappaiya Urai

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.