Kural 191 details

அறத்துப்பால்இல்லறவியல்பயனில சொல்லாமை

Virtueஇல்லறவியல்பயனில சொல்லாமை

Back to search

Verse

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
Pallaar Muniyap Payanila Solluvaan Ellaarum Ellap Patum

பொருள் (Tamil)

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

Explanation (English)

Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise

Athigaram

பயன்இல சொல்லாமை

Section / Chapter

Section: 20.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

Parimezhalagar_Urai

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

M_Varadharajanar Urai

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

Solomon_Pappaiya Urai

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.