Kural 170 details
அறத்துப்பால் • இல்லறவியல் • அழுக்காறாமை
Virtue • இல்லறவியல் • அழுக்காறாமை
Verse
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொருள் (Tamil)
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
Explanation (English)
No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain
Athigaram
அழுக்காறாமை
Section / Chapter
Section: 17.10
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
Parimezhalagar_Urai
அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)
M_Varadharajanar Urai
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
Solomon_Pappaiya Urai
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை