Kural 165 details
அறத்துப்பால் • இல்லறவியல் • அழுக்காறாமை
Virtue • இல்லறவியல் • அழுக்காறாமை
Verse
வழுக்காயும் கேடீன் பது.
பொருள் (Tamil)
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
Explanation (English)
Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate
Athigaram
அழுக்காறாமை
Section / Chapter
Section: 17.5
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
Parimezhalagar_Urai
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
M_Varadharajanar Urai
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
Solomon_Pappaiya Urai
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்