Kural 164 details
அறத்துப்பால் • இல்லறவியல் • அழுக்காறாமை
Virtue • இல்லறவியல் • அழுக்காறாமை
Verse
ஏதம் படுபாக்கு அறிந்து.
பொருள் (Tamil)
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
Explanation (English)
The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the cause
Athigaram
அழுக்காறாமை
Section / Chapter
Section: 17.4
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
Parimezhalagar_Urai
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
M_Varadharajanar Urai
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
Solomon_Pappaiya Urai
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்