Kural 161 details

அறத்துப்பால்இல்லறவியல்அழுக்காறாமை

Virtueஇல்லறவியல்அழுக்காறாமை

Back to search

Verse

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Ilaadha Iyalpu

பொருள் (Tamil)

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்

Explanation (English)

As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind

Athigaram

அழுக்காறாமை

Section / Chapter

Section: 17.1

Chapter: அறத்துப்பால்

Kalaingar_Urai

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

Parimezhalagar_Urai

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]

M_Varadharajanar Urai

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

Solomon_Pappaiya Urai

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.