Kural 158 details
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
Virtue • இல்லறவியல் • பொறையுடைமை
Verse
தகுதியான் வென்று விடல்.
பொருள் (Tamil)
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்
Explanation (English)
With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail
Athigaram
பொறை உடைமை
Section / Chapter
Section: 16.8
Chapter: அறத்துப்பால்
Kalaingar_Urai
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
Parimezhalagar_Urai
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
M_Varadharajanar Urai
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Solomon_Pappaiya Urai
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.